இம்பால், ஜூலை 28 - மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4 அன்று பழங்குடி பெண்கள் இருவரை, ஆயி ரக்கணக்கான ‘மெய்டெய்’ இளைஞர்கள் சேர்ந்து, நிர்வாணமாக இழுத்துச் சென்ற துடன், அவர்களைக் கும்பல் வல்லுற வுக்கும் உள்ளாக்கிய கொடுமை நடந்தது. இந்தச் சம்பவம் மிகவும் தாமதமாக கடந்த ஜூலை 19 அன்றுதான் வெளி யுலகிற்குத் தெரியவந்தது. சமூக வலைத் தளத்தில் வெளியான அந்த வீடியோவைக் கண்டு உலகமே அதிர்ந்தது. மனித சமூக மாக பிறந்த ஒவ்வொருவரையும் வெட்கித் தலைகுனிய வைத்தது. ஜூலை 19 அன்று வெளியான வீடியோ வால் துணிச்சல் பெற்றவர்கள், இதுபோன்ற அரங்கேறிய வேறுபல கொடூரங்கள் தொடர்பான வீடியோக்கள், புகைப்பட ஆதாரங்களையும் வெளியிட ஆரம்பித்த னர். இதனால், மணிப்பூரில் குக்கி பழங்குடி பெண்கள் அனுபவிக்கும் துயரங்கள், ஒவ்வொன்றாக வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தன. இவை ஒன்றிய - மாநில பாஜக ஆட்சி யாளர்களுக்கு நெருக்கடியாக மாறின. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்கக் கோரி, எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டங்களால் நாடாளுமன்றம் கடந்த 7 நாட்களாக முடங்கிக் கிடக்கிறது. இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நீதி கிடைப்பதற்கான நடவடிக்கை களில் இறங்காத மோடி அரசு, மணிப்பூர் உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்களைத் தேடிப் பழிவாங்கும் திட்டத்தைக் கையில் எடுத்தது.
சிபிஐ விசாரணை
குறிப்பாக, பழங்குடி பெண்கள் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கொடூ ரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. மணிப்பூர் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வும் ஒன்றிய அரசு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மணிப்பூர் வன்முறையோடு தொடர் புடைய 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஏற்கெனவே சிபிஐ-யிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள நிலையில், வீடியோ விவகாரமும் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையை, அண்டை மாநிலமான அசாமில் நடத்துவதற்கும் அனுமதி கேட்டு, ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றத் தை நாட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான், குக்கி பழங்குடி பெண்கள் மீதான கும்பல் வல்லுறவுக் கொடுமையை இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் வெளிச்ச த்திற்கு வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வீடியோவை எடுத்தவரை, மோடி அரசு கைது செய்துள் ளது. அவர் இந்த வீடியோவை எடுப்ப தற்குப் பயன்படுத்திய மொபைல் போனையும் பறிமுதல் செய்துள்ளது
ஆகஸ்டில் பேரவை சிறப்புக் கூட்டம் : மணிப்பூர் பாஜக அரசு முடிவு!
மணிப்பூர் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம், ஆகஸ்ட் மாதத்தில் கூட்டப்பட உள்ளதாக மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது. “மணிப்பூரின் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்க, பேரவை யின் சிறப்புக் கூட்டத்தை கூட்டுமாறு பல்வேறு அரசியல் கட்சிகள் கோரி க்கை விடுத்தன. இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்தில் சிறப்புக் கூட்ட த்தைக் கூட்ட மாநில அரசு முடி வெடுத்துள்ளது” என மாநில அமை ச்சர் சபம் ராஜன் தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த மே மாதம் நடைபெற்ற வன்முறையின்போது, பாஜக எம்எல்ஏ விவுங்ஸகின் வால்டே படுகாயமடைந்தார். அவரது மருத்துவ கவனிப்புக்கான செலவை மாநில அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது குறித்து அமைச்ச ரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப் பினர். இந்தக் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் ராஜன், எம்எல்ஏ-வின் உடல் நிலை குறித்து மாநில அரசு கவ னத்தில் கொண்டதாகவும், மாநில அமைச்சர்கள் அவரை நேரில் சென்று நலம் விசாரித்ததாகவும் சமாளித்தார்.
‘புரட்சியின் குரல்’: குக்கி பழங்குடியினரின் புதிய செய்தித்தாள்!
மணிப்பூரில் இணைய சேவை இன்னும் முழுமையாக சீரடை யாததால் தகவல் பரிமாற்றத்திற்காக குக்கி பழங்குடியினத் தன்னார்வ லர்கள் ‘ஜலேன் அவ்கின்’ (Zalen Awgin) என்ற பெயரில் செய்தித்தாள் துவங்கியுள்ளனர். ‘ஜலேன் அவ்கின்’ என்ற சொல்லு க்கு ‘புரட்சியின் குரல்’ (The Voice of the Revolution) என்பதுஅர்த்தமாகும். குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து இதனைத் தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர். அனைத்து கிராமங் களுக்கும் இந்த செய்தித்தாள் சென்ற டையும் வகையில் ஏற்பாடு செய்து வருகின்றனர்.